بسم الله الرحمن الرحيم
நூல்: அல்-மபாதி உல்-முபீதா பித்-தவ்ஹீதி வல்-பிக்ஹி வல்-அகீதா
அஷ்ஷெய்ஹ் அபூ அப்திர்-ரஹ்மான் யஹ்யா இப்னு அலி அல்ஹஜூரி (ஹபிழஹுல்லாஹ்)
விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி
பாடம்: 04
05 – الرَّبُّ – படைத்துப் பரிபாலிப்பவன் / இரட்சகன்
06 – الرَّحْمَانُ – அகிலத்தார் அனைவரின் மீதும் இரக்கம் காட்டுபவன்
07 – الرَّحِيمُ – மறுமையில் முஃமீன்களுக்கு மாத்திரம் இரக்கம் காட்டுபவன்
قَالَ تَعَالَى: اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ / الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன். (ஆல்-பாத்திஹா:03)
மேலும், இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் நீங்கள் கண்ணியமும், மகத்துவமும் உடைய இறைவனை; படைத்துப் பரிபாலிப்பவனை மகிமைப்படுத்துங்கள். (முஸ்லிம்:479)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! அல்லாஹ்வின் பெயர்களை சரியான முறையில் ஆதாரங்களுடன் கற்று கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.