பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகள் – 02

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.

❆❆ அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வதஆலா; பெற்றோர் உயிரோடு இருக்கும் போது அல்லது மரணித்த பின்னர்; அவர்களுக்காக பிள்ளைகள் துஆச் செய்தால்; சொர்க்கத்தில் அவர்களின் படித்தரங்களை உயர்த்துவான். இதுவே நாம் எமது பெற்றோருக்குச் செய்யும் நலவாகும்.

❆❆ பெற்றோர் உயிரோடு இருக்கும் போது எங்களிடம் பணம் இருந்தால் நன்மையை நாடி; அவர்களுக்காக செலவுகளைச் செய்தல்; அவர்கள் மரணித்துவிட்டால் அவர்களுக்காக ஸதகதுல் ஜாரியாக்களைச் செய்தல். இதுவே நாம் எமது பெற்றோருக்குச் செய்யும் நலவாகும்.

❆❆ பெற்றோரை புறக்கணித்து; அவர்களுக்கு நோவினைகளை ஏற்படுத்தி; வாழும் வாழ்க்கை ஒரு கேடுகெட்ட வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ் சபித்த ஒரு வாழ்க்கையாகும்.

❆❆ பெற்றோருக்கு நலவு செய்வது நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்களின் வழிமுறையாகும். நபிமார்களும் ரஸூல்மார்களும் அல்லாஹ்வுக்கும் தமது பெற்றோருக்கும் வழிப்பட்டு நடக்காதவர்களாக இருக்கவில்லை.

கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யவேண்டிய கடமைகள் மற்றும் உரிமைகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)