மார்க்க அறிவை கற்றுக் கொள்வதில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகள்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم اللــــه الرحمـــــــــن الرحيم

உண்மயான ஆண்மக்களாக, அல்லாஹ்வின் இல்லங்களுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுகையை நிலை நாட்டி; பின்னர் மஸ்ஜிதில் அமர்ந்து அல்-குர்ஆனையும் ஸுன்னாவையும் ஸலபுஸ்ஸாலிஹீன்களின் வழியில் கற்றுக் கொள்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பின்வரும் நான்கு சிறப்புக்களை கொடுக்கின்றான்.

  1. அல்லாஹ்வின் ஸகீனத் அவர்கள் மீது இறங்குகின்றது.
  2. அல்லாஹ்வின் கருணை அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.
  3. மலாயிகாமார்களும் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
  4. அல்லாஹ் அவர்களை அவனுக்கு மத்தியில் இருக்கும் மலாயிகாமார்களிடத்தில் புகழ்ந்து பேசுகின்றான்.

மார்க்க அறிவைத் தேடுவது இபாதாவாகும்.

இந்த இபாதாவைக் கற்கும்போது மேலான ஒழுக்கங்களை பேணுவது கடமையாகும்.

இந்த மார்க்க அறிவைத் தேடுவது முஸ்லிமான ஆண், பெண் இருபாலாருக்கும் கட்டாயக் கடமையாகும்.

  • அல்-இஹ்லாஸு லில்லாஹ்: அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடி இபாதத் என்ற நிய்யத்தில் அறிவைக் கற்றுக் கொள்ளல்.
  • இத்திபாஉஸ் ஸுன்னாஹ்; நபி ﷺ அவர்களின் வழிமுறையில் (ஸலபுஸ்ஸாலிஹீன்களின் விளக்கத்தில்) அறிவைக் கற்றுக் கொள்ளல்.
  • அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு அறிவைக் கற்றுக் கொள்ளல்.
  • எந்த அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அந்த அறுவுக்கு முன்னுறிமையும் முக்கியத்துவமும் கொடுத்து அறிவைக் கற்றுக் கொள்ளல்.
  • அறிவைத் தேடிப் பிரயாணம் செய்து அறிவைக் கற்றுக் கொள்ளல்.
  • அறிவை நம்பிக்கைக்குறிய இடத்திலிருந்து பெற்றுக் கற்றுக் கொள்ளல்.
  • அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் இருந்து அறிவைக் கற்றுக் கொள்ளல்.
  • பொறுமையாக அறிவைக் கற்றுக் கொள்ளல்.

மார்க்க அறிவை கற்றுக் கொள்வதில் பேணப்பட வேண்டிய; மேற்கூறப்பட்ட ஒழுங்கு முறைகளை ஆதாரங்களுடன் கீழ்க்காணும் உரையைச் செவிமடுத்துக் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

Deen – மார்க்க அறிவு

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)