• Home
  • ஹதீத்
  • யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஐந்து கட்டளைகள்

யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஐந்து கட்டளைகள்

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வஹி மூலமாக ஐந்து கட்டளைகளைக் கொடுத்து; பனூ இஸ்ரவேலர்களுக்கு அவைகளை எத்திவைக்குமாறும் செயல்படுத்துமாறும், ஏவினான்.

அப்போது நபி யஹ்யா இப்னு ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இவ்விடயத்தை சற்று பிற்போட்டார்கள்.

அப்போது நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம்; நிச்சயமா அல்லாஹ் உங்களுக்கு ஐந்து விடயங்களைக் கொண்டு கட்டளையிட்டான். அவகளை செயல்படுத்துமாறும், பனூ இஸ்ரவேலர்களுக்கு எத்திவைக்குமாறும், அவகளை அவர்கள் செயல்படுத்துமாறும்; நீங்கள் அவைகளை எத்திவைக்காவிட்டால்; நான் அவைகளை எத்திவைத்து அவர்களுக்கு ஏவுவேன்.? என்று கூறினார்.

அதற்கு நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்; என்னை முந்திக் கொண்டு அவைகளை அவ்வாறு நீங்கள் இஸ்ரவேலர்களுக்கு எத்திவைத்தால்; அல்லாஹுத்தஆலா எனக்கு தண்டனையை தருவான். இல்லாவிட்டால் நான் பூமியால் விழுங்கப்படுவேன். என்று நான் பயப்படுகிந்ரேன் என்று கூறினார்கள்.

அதன் பின்னர் பைத்துல் மக்தஸில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களை ஒன்று சேர்த்தார்கள்; எனவே மக்கள் மஸ்ஜிதில் ஒன்று கூடினார்கள். அதேபோல் உயர்ந்த இடங்களில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது நபியவர்கள் இந்த ஐந்து கட்டளைகளையும் மக்களுக்கு எத்திவைத்தார்கள்.

இன்ஷா அல்லாஹ்! அந்த ஐந்து கட்டளைகள் என்ன என்பதை அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல்-ஹிந்தி ஹபிழஹுல்லாஹ் அவர்களின் இந்த நான்கு பாடங்களையும் செவிமடுத்து கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)