ரமழான் சிறப்பு அல்-குர்ஆன் தப்ஸீர் தொடர்: ஸூரத்துந் நபஃ (பாடம் – 01) – வசனங்கள் 1-16

Facebook
Twitter
Telegram
WhatsApp

அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி (வப்பகஹுல்லாஹ்)

முன்னுரை

1. ஸூரத்துந் நபஃ (Surah An-Naba) – அறிமுகம்

இந்த விளக்கவுரைத் தொடரின் முதலாவது சூரா ‘ஸூரத்துந் நபஃ’ ஆகும்.

வசனங்கள்: 40 வசனங்களைக் கொண்டது.

வகை: இது ஒரு ‘மக்கியா’ (மக்காவில் இறக்கப்பட்ட) சூரா ஆகும்.

மக்கியா சூராக்களின் பொதுவான அம்சம்: பொதுவாக மக்காவில் இறக்கப்பட்ட வசனங்கள் மனிதப் படைப்பின் ஆரம்பம், மரணம், மரணத்திற்குப் பின்னால் உயிர் பெறுதல் மற்றும் மறுமை ஆகியவற்றை உறுதிப்படுத்துவது குறித்துப் பேசும்.


2. ஸூராவின் கட்டமைப்பு (ஆறு பகுதிகள்)

இந்தச் சூராவில் பேசப்படும் விஷயங்களை ஆறு முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. மறுமை நாள் பற்றிய நிராகரிப்பாளர்களின் கேள்விகளும் சந்தேகங்களும்.

2. அல்லாஹ்வின் பேராற்றல் மற்றும் அவனது ‘ருபூபிய்யத்’ குறித்த அத்தாட்சிகள்.

3. தீர்ப்பு நாளான மறுமை நாள் உறுதியானது என்பது பற்றிய விளக்கம்.

4. மறுமை நாளில் இணைவைப்பாளர்கள் மற்றும் காபிர்களின் நிலை.

5. மறுமை நாளில் முஃமின்களின் நிலை மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் பாக்கியங்கள்.

6. மறுமை நாளின் பயங்கரம், மலக்குகளின் வருகை மற்றும் அதன் நிகழ்வுகள்.


3. வசனங்கள் 1 – 5: மறுமை பற்றிய விவாதம்

அல்லாஹ் இந்தச் சூராவை ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கின்றான்: “عَمَّ یَتَسَآءَلُوْنَ” (எதைப் பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கின்றார்கள்?)”.

மகத்தான செய்தி (அந்நபஉல் அழீம்): இதற்குப் பதிலாக, “அவர்கள் ஒரு மகத்தான செய்தியைப் பற்றி விசாரித்துக் கொள்கின்றார்கள்” என்று அல்லாஹ் கூறுகிறான். ‘மகத்தான செய்தி’ என்பது எதைக் குறிக்கிறது என்பதில் உலமாக்களிடம் இரண்டு கருத்துக்கள் உள்ளன:

    1. அல்குர்ஆன்.

    2. மறுமை நாள் (யவ்முல் கியாமா). இதில் மறுமை நாள் என்பதே சரியான கருத்தாகும்.

குப்பார்களின் சந்தேகம்: அன்றைய கால குரைஷி காபிர்கள் மறுமை நாளைப் பொய்ப்பித்தனர். அவர்கள் இது குறித்துப் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அல்லாஹ் இதனைச் சுட்டிக்காட்டி, “நிச்சயமாக அவர்கள் அதனைப் பற்றி அறிந்து கொள்வார்கள்” (كَلَّا سَيَعْلَمُونَ) என்று எச்சரிக்கிறான். அந்த நாளில் அவர்கள் உண்மையை உணர்வார்கள், ஆனால் அப்போது கொள்ளும் ஈமான் அவர்களுக்குப் பயன் அளிக்காது.


மறுமையை நிராகரிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, அல்லாஹ் தனது படைப்பாற்றலை விளக்கும் ஒன்பது அத்தாட்சிகளைக் குறிப்பிடுகிறான்:

1. பூமி: பூமியை மனிதர்கள் வாழ்வதற்கும் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்ற ஒரு விரிப்பாக (மிஹாதா) அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

2. மலைகள்: பூமி அசையாமல் உறுதியாக இருப்பதற்காக மலைகளை முளைகளாக (அவ்தாதா) நட்டுள்ளான். இந்த மலைகள் வெவ்வேறு நிறங்களிலும் தன்மைகளிலும் படைக்கப்பட்டுள்ளன.

3. ஜோடிகள்: மனிதர்களை ஆண், பெண் என ஜோடிகளாகப் படைத்து, அவர்களுக்கு இடையில் நேசத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளான்.

4. உறக்கம்: மனிதர்களின் களைப்பைப் போக்கி, ஓய்வு பெறுவதற்காக உறக்கத்தை (சுபாதா) ஒரு அருட்கொடையாகத் தந்துள்ளான்.

5. இரவும் பகலும்: இரவை ஒரு போர்வையாகவும் (லிபாஸா), பகலை வாழ்வாதாரத்தைத் தேடும் நேரமாகவும் (மஆஷா) அல்லாஹ் அமைத்துள்ளான்.

6. வானங்கள்: நமக்கு மேலால் ஏழு உறுதியான வானங்களை அல்லாஹ் படைத்துள்ளான்.

7. சூரியன்: பிரகாசிக்கக் கூடிய மற்றும் வெப்பத்தைத் தரக்கூடிய ஒரு விளக்காகச் சூரியனை அமைத்துள்ளான்.

8. மழை: மேகங்களிலிருந்து நீரை இறக்கி வைக்கின்றான்.



ஜுஸ்வு அம்ம விளக்கவுரைத் தொடர் – பாடம் 01

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts