ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள் – 2

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp

بسم الله الرحمن الرحيم

நூல்: அல்-ஃபவாகிஹ் அல்-ஜனிய்யஹ் மினல் ஆதாரிஸ் ஸலப்பிய்யஹ் (ஸலபுகளின் அடிச்-சுவட்டிலிருந்து பரிமாரும் கனிகள்)

ஆசிரியர்: அஷ்ஷைக் அபூ இப்றாஹீம் முஹம்மத் அல்-மானிஃ அல்-உன்ஸீ ஹபிழஹுல்லாஹ்

விளக்க உரை: அபூ ஜுலைபீப் ஸாஜித் இப்னு (சுப்யான்) நஸ்ருதீன் அஸ்-ஸெய்லானி

✽✽ இல்மை (அறிவவை)க் கற்றுக் கொள்வதின் சிறப்பு ✽✽

மார்க்க அறிவு என்பது அல்லாஹ்வும் அவனதும் தூதரும் கூறியது ஆகும்.  மேலும் அதற்கு அமைய ஸஹாபாக்கள் எதனைச் செயற்படுத்திக் காட்டினார்களோ! அதுவும் மார்க்க அறிவு ஆகும். அவர்கள்தான் இந்த மார்க்க அறிவு சம்பந்தமாக மிகவும் அறிந்தவர்கள்.

❖❖ அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகிறான்?

அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு நலவை நாடுகிறானோ! அவரை மார்க்கத்தில் விளக்கம்  பெற்றவராக ஆக்கிவிடுகிறான். அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா யாருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கவில்லையோ! அவனுக்கு நலவை நாடவில்லை.

ஆகவே! மார்க்க அறிவை பெற்றுக் கொள்வது கட்டாயக் கடமை ஆகும். அந்த மார்க்க அறிவு அல்-குர்ஆன், அஸ்-ஸுன்னா ஆதாரங்களில் இருந்து பெறப்பட வேண்டும். எனவே யார் ஆதாரங்ககின் அடிப்படையில் மார்க்க அறிவைப் பெறவில்லையோ! அவர் மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக மாட்டார். (இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கூற்று)

❖❖ அறிவைக் கொண்டு ஒரு உபதேசம்

அறிவைக் கொண்டு உபதேசம் செய்கிறேன். அறிவு கைப்பற்றப்படுவதற்கு முன்னர் அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள். உலமாக்கள் மரணிப்பதன் மூலமாக அறிவு கைப்பற்றப்படும். (இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்று. இக்கூற்று லயீப்; அதன் கருத்து உண்மையானது)

இங்கு பதிவிடப்படும் ஸலபுஸ் ஸாலிஹீன்களின் அடிச்-சுவடுகள் பற்றிய பாடங்களை; இன்ஷா-அல்லாஹ்! ஆதாரங்களுடன் செவிமடுத்துக் கற்றுக் கொள்வோம்!

எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

அண்மைய இடுகைகள் Recent Posts

அண்மைய ஜுமுஆக்கள்

பிரிவுகள் (Catagories)