அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் – விளக்கவுரை – 14
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்க சகிப்பவன் (ஸூரத்துத் தகாபுன்: 17)
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் மிக அங்கீகரிப்பவன், மிக்க சகிப்பவன் (ஸூரத்துத் தகாபுன்: 17)
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: (யாவையும்) படைத்தவன், அவனோ நுட்பமான (அறிவுடைய)வனாக, யாவையும் நன்குணர்பவனாக இருக்க (நெஞ்சங்களில் உள்ளவற்றை) அவன் அறியமாட்டானா? (ஸூரத்துல் முல்க்: 14)
உயர்ந்தவனாகிய அல்லாஹ்வுடைய கூற்று: நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய், நீயே ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்” (ஸூரத்துல் மாயிதா: 117)
அவனே புகழுக்குரிய பாதுகாவலன். (ஸூரதுஷ் ஷூரா: 28) / அவனே சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன். (ஸூரதுல் ஹஜ்: 78)
கண்ணியமான மகத்துவமிக்கவனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: நானோ ஏகன்; அனைத்து விடயங்களை விட்டும் எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (புஹாரி: 4974)
மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் நன்கறிகிறவன் (எல்லோரையும் விட) அவன் மிகப் பெரியவன், மிக்க உயர்வுடையவன். (ஸூரதுர் ரஃது: 09)
அவனே முதலாமவனும், கடைசியானவனும், (அவனுக்கு முன்னும், பின்னும் ஒன்றுமில்லை!) அவனே (சகலவற்றிற்கும்) மேலானவனும், அந்தரங்கமானவனும் (ஆவான்), மேலும், அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன். (ஸூரதுல் ஹதீத்:03)
அவன் (தான்) அல்லாஹ், படைப்பவன், (அவனே படைப்புகளை ஒழுங்குபடுத்தி) உண்டாக்குபவன், (அவனே படைப்பினங்களின்) உருவத்தை அமைப்பவன், அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன, வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன, அவனே (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஅலா ஆலிஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ருகூஉவில் நீங்கள் கண்ணியமும், மகத்துவமும் உடைய இறைவனை; படைத்துப் பரிபாலிப்பவனை மகிமைப்படுத்துங்கள். (முஸ்லிம்:479)
அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை. (அவன்) ஜீவனுள்ளவன், (என்றென்றும்) நிலைத்திருப்பவன் (ஸூரதுல் பகரா:255)
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)