بسم اللــــه الرحمـــــــــن الرحيم
ஜுமுஆ உரை:
அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்
சத்தியத்தை தேடுகின்றவர்களே! கீழ்க்காணும் ஹதீஸை மிகக் கவனமாக படித்துப் பாருங்கள். நாம் இன்று பாவங்களைச் செய்கின்றோம்; ஆனால் அப்-பாவங்களை பாவங்களாகவே நாங்கள் கருதுவதில்லை. போடோ (PHOTO), வீடியோ (VIDEO) எடுக்காமல் எங்களால் வாழவே முடியாது என்ற நிலைக்கு எங்களில் அதிகமானவர்கள் சென்றுவிட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்த, எச்சரித்த, சபித்த மிகக் கடுமையான பாவமான உருவப் படங்களை அமைப்பதால் (நவீன முறையில் PHOTO, VIDEO எடுப்பதால்) ஏற்படும் பாவம்; இன்று எங்கள் மத்தியில் மிகவும் இலேசான ஒரு விடயமாக ஆகிவிட்டது.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தபியீன்களைப் பார்த்து பின்வருமாரு கூறுகின்றார். [[நீங்கள் சில பாவச் செயல்களைச் செய்கின்றீர்கள்; அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாக கருதுகின்றீர்கள். (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி ﷺ அவர்களின் காலத்தில் “மூபிகாத்”- (அழிவை ஏற்படுத்தக் கூடிய பேரழிவு) என்றே கருதிவந்தோம். (ஸஹீஹ் புகாரி: 6492.)
இன்ஷா அல்லாஹ்! இந்த ஜுமுஆ உரையை முழுமையாக செவிமடுப்போம்! பாவங்களில் இருந்து விலகி நடப்போம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.