அல்-குர்ஆன் நீதியான நேரான பாதையின்பால் வழிகாட்டுகிறது.
அல்-குர்ஆன் ஸூரத்துல் பாதிஹா தொடக்கம் ஸூரத்துன் நாஸ் வரையில் அல்லாஹ்வின் தவ்ஹீதைப் பற்றிப் பேசுகின்றது.
அல்-குர்ஆன் அதில் அல்லாஹுத்தஆலா பல உதாரணங்களை சுட்டிக் காட்டிப் பேசுகின்றான்.
இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டதுதான் ஒவ்வொரு கூட்டங்களும்.
இந்த வழிகெட்ட கூட்டங்களில் இருந்து எங்களுடைய ஈமானை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
அந்த ஈமானிய பாதுகாப்பை நாம் எங்கிருந்து எடுக்க வேண்டும்?
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
இன்-ஷா அல்லாஹ்! கீழ் காணும் உரையை செவிமடுப்போம்! வழிகெட்ட கூட்டங்களில் இருந்து எங்களைப் பாதுகாக்கும் வழிகளை ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
ஜுமுஆ உரை: அஷ்-ஷெய்க் அபூ அப்திர்-ரஹ்மான் நவ்வாஸ் அல்-ஹிந்தி அஸ்-ஸெய்லானி ஹபிழஹுல்லாஹ்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.