
அகீதா – லாமியா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – விளக்கம் – 09
ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் (ஸலபுஸ்-ஸாலிஹீன்களின்) கொள்கைக் கோட்பாடு எப்படிபட்டது என்பதை இந்த முதலாவது மஸாயில் பேசுகின்றது.
ஸஹாபாக்கள் விஷயத்தில் அஹ்லுஸ்-ஸுன்னா வல்-ஜமாஅத்தினரின் (ஸலபுஸ்-ஸாலிஹீன்களின்) கொள்கைக் கோட்பாடு எப்படிபட்டது என்பதை இந்த முதலாவது மஸாயில் பேசுகின்றது.
بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அல்லஹ்வின் புத்தகம்-அல்-குர்ஆனும் ரஸூலுல்லாஹி ﷺ அவர்களின் ஸுன்னாவும் ஸஹாபாக்களின் விளக்கமும்:
அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் ஸஹாபாக்கள் எவ்வாறு விளங்கி எடுத்து நடந்தார்களோ அவ்வாறு விளங்கி எடுத்து நடப்பதுதான் எமது கொள்கைக் கோட்பாடாகும்.
(நபியே!) நீர் கூறுவீராக! இதுவே எனது நேரான வழியாகும், நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன், தெளிவான ஞானத்தின் மீதே, நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (ஸூரத்து யூஸுஃப்: 108)