
ஷரஹ் – லாமிய்யா இப்னு தைமிய்யா கவிதைத் தொகுப்பு – Notes-08
ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.
ஒரு மனிதன் தன்னுடைய இறைவன் சார்ந்த அறிவுகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளத்தில் உறுதியாக உண்மைப்படுத்துவது அகீதாவாகும்.
மார்க்க அறிவை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு ஏற்பட்டால் அது அல்லாஹ் நமக்குச் செய்த ஒரு அருட்கொடையாகும். இதன் மூலம் நாம் மார்க்க அறிவைக் கற்றுத் தெளிவு பெற்றால் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறலாம்.
லாமிய்யா கவிதை அடிகள் எழுதப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அதிகமான உலமாக்கள்; அது ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்குரிய கவிதைத் தொகுப்பு என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து வைத்து சத்தியத்தின் அடிப்படையில் மக்களை ஒற்றுமைப்படுத்த கூடியதாக இருக்கிறது.
இந்த கவிதைத் தொகுப்பின் அடிகளில் வரும் இறுதி எழுத்து ‘லாம்’ என்ற எழுத்தில் முடிவடைகின்றது. எனவே உலமாக்கள் இக் கவிதைத் தொகுப்பிற்கு “அல்-லாமிய்யா”. என்று பெயர் சூட்டினார்கள்.
நிச்சயமாக இந்த இல்ம் (மார்க்க அறிவு) என்பது தீன் ஆகும். நீங்கள் யாரிடம் இருந்து உங்களது தீனை எடுக்கிறீர்கள் என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்
இந்த உம்மத்தின் ஆரம்ப கால சந்ததியினரை எது சீர்திருத்தியதோ! அதன் மூலமே தவிர இந்த உம்மத்தின் இறுதி கால சந்ததியினரை சீர்திருத்த முடியாது. அதே போன்று அன்று (ஸஹாபாக்களிடத்தில்) எது மார்க்கமாக இருக்கவில்லையோ! இன்றும் அது மார்க்கமாக இருக்காது.
இமாமவர்கள் சஊதி அரேபியாவில் ஷிர்க் நிறைந்திருந்த காலகட்டத்தில் தவ்ஹீதை புதுப்பித்து தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். அதன் பிறகு இந்த தஃவா சஊதியிலிருந்து இந்தியா இலங்கை உட்பட உலகம் முழுக்க பரவியது. இத்தகைய தவ்ஹீத் அடிப்படையிலான தஃவா பரவிய போது அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சூஃபியாக்கள் இதற்கு (வஹ்ஹாபிசம்) என்று பெயர் வைத்தனர்.
இன்று அல்லாஹ்வின் அத்தாட்சிகளும் அவனின் வசனங்களும் சிந்திக்கப்படாத காரணத்தால், மனித கண்டுபிடிப்புக்கள் அவர்களின் படைப்புக்களாகவே பார்க்கப்படுகின்றன. அது அல்லாஹ்வின் படைப்பு என்று பார்க்கப்படாத நிலைக்குள் உலகம் சென்றுவிட்டது.
அகீதா மற்றும் அதுவல்லாதா விடயங்களில் சரியான ஆதாரம் எதுவுமில்லாமல், வழி தவறிய இமாம்களை கண்மூடித்தனமாக யாரெல்லாம் பின்பற்றினார்களோ அவர்களின் வழித்தோன்றல்கள்தான் “ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷாஇறா, ஸூபிய்யா, அவர்கள் அல்லாத ஏனைய பிரிவினர்கள்”.