بسم الله الرحمن الرحيم
அவசரம் கைசேதத்தைதான் கொண்டுவரும்
விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍؕ سَاُورِيْكُمْ اٰيٰتِىْ فَلَا تَسْتَعْجِلُوْنِ
மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள். (ஸூரத்துல் அன்பியா:37)
யார் அவசரமின்றி தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறாரோ!அவர் தன்னுடைய தேவையின் ஒரு பகுதியை அடைந்து கொள்வார். யார் அவசரப் பட்டவனாக தன்னுடைய செயல்களில் ஈடுபடுகிறாரோ! அவரிலே தவறுகள் அதிகரிக்கும் என்று ஒரு கவிஞர் அரபு மொழியில் கூறுகிறார்.
அலீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
மக்கள் எதைப் புரிந்துகொள்வார்களோ அதையே அவர்களிடம் கூறுங்கள். (அவர்களுக்குப் புரியாதவற்றைப் பேசி, அதனால்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (அவர்களால்) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா, என்ன? (புகாரி)
இன்-ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! ஆதாரங்களுடன் இப்பாடத்தைக் கற்றுக்கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

