بسم الله الرحمن الرحيم
தவ்ஹீத்-அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவதை அறிந்துகொள்வதற்கும்; ஷிர்க்-இணைவைப்பிலிருந்து விடுபடுவதற்குமான நான்கு அடிப்படைகள்.
ஆசிரியர்: இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்
விரிவுரை; [தமிழ் மொழி மூலம்] அபு அம்ர் பஸ்மில் இப்னு அமீர் (பரீஸ்) அஸ்-ஸெய்லானி
பாடம்: 05 (இரண்டாவது அடிப்படை தொடர்..)
“ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட (அங்கீகரிக்கப்பட்ட) துஆ உள்ளது. அதனை அத்தூதர்கள் இப்புவியிலேயே துரிதப்படுத்தி கேட்டு விட்டார்கள். நான் எனக்குரிய அப்பிரார்த்தனையைப் பிற்படுத்தி வைத்துள்ளேன். மறுமையில் என் உம்மத்தாருக்குச் செய்வதற்காக அங்கீகரிக்கப்படவுள்ள அப்பிரார்த்தனையை வைத்துள்ளேன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஷபாஅத்-பரிந்துரை:
❆❆ ஷபாஅதுன்-மன்பிய்யாஹ் – தடுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட பரிந்துரை; ஷபாஅதுன்-முஸ்பதா – அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரை என இரு வகைப்படும்.
❆❆ ஷபாஅதுன்-முஸ்பதா – அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரை; இது இரு வகைப்படும்.
❆❆ ஷபாஅதுன் ஹாஷ்ஷா – நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் குறிப்பான பரிந்துரை; இது மூன்று வகைப்படும்.
இன்ஷா-அல்லாஹ்! அல்-கவாயித் அல்-அர்பஃ (நான்கு அடிப்படைக் கோட்பாடுகள்) என்ற அடிப்படை அகீதா பாடத்தின் இரண்டாவது அடிப்படையின் தொடரில்; ஷபாஅத்-பரிந்துரை என்ற பாடத்தின் விளக்கத்தை கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக்கொள்வோம்! பயன் பெறுவோம்!
அகீதா சீர்குலைந்தால் அந்த இடத்தை வழிகேடு ஆக்கிரமித்துவிடும். எனவே வழிகேட்டிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை; ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான அகீதாவைக் கற்றுக் கொள்வது கட்டாயக் கடமையாகும்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

