بسم الله الرحمن الرحيم
நூலாசிரியர்: அல்-இமாம் அல்-முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல்-வாதிஈ ரஹிமஹுல்லாஹ்
ஷரஹ்-விளக்கவுரை: அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
மன்ஹஜுஸ் ஸலஃப் என்றும்; அஹ்லுல் ஹதீஸ் என்றும்; அஹ்லுல் அஸர் என்றும் அழைக்கப்படக்கூடிய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்துடைய கொள்கை விளக்க புத்தகம்!
அகீதா – கொள்கை கோட்பாடு: 2/37
அல் இமாம் அல் முஹத்திஸ் முக்பில் இப்னு ஹாதி அல் வாதிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
نعتقد أن نداء الأموات والاستعانة بهم وكذا الأحياء فيما لا يقدر عليه
إلا الله شِركٌ بالله.
மரணித்தவர்களிடத்தில் துஆ கேட்பதும், அவர்களைக் கொண்டு உதவி தேடுவதும், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் ஆற்றல் பெறாத விஷயங்களில் உயிருள்ளவர்களைக் கொண்டு உதவி தேடுவதும் ஆகிய இவை அனைத்தும் அல்லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய காரியங்கள் (ஷிர்க்) ஆகும் என்பதை நாங்கள் அகீதாவாக கொள்கிறோம்.
மேற்காணும் இமாம் முக்பில் இப்னு ஹாதி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அகீதா- கொள்கை கோட்பாடு 02;
கீழ்காணும் அதற்கான ஷரஹ்- விளக்க உரை: 02 (அஷ்-ஷெய்க் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்)
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.