بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
அல்லாஹுத்தஆலா நாங்கள் அதிக அதிகமான நன்மைகளை (கூலிகளை) பெற்றுக் கொள்வதற்காகவும்; சொர்க்கத்தில் உயர்தரமான இடங்களை அடைந்து கொள்வதற்காகவும் எவ்வளவோ வழிமுறைகளை வைத்துள்ளான். அல்லாஹ்வும் அவனது தூதரும் அந்த வழிமுறைகளை கூறிக்காட்டி எங்களை உற்சாகப்படுத்தியுள்ளார்கள். எனவே அந்த நல்-வழிகளை அறிந்து அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவதுதான் ஒரு முஸ்லிமின் புத்திசாலித்தனமாகும்.
قُلْ اِنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ ۚ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ
நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; (ஸூரத்துல்ஆல இம்ரான்: 73)
அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்களின் கூலிகளை இரட்டிப்பாக்கிக் கொடுக்கிறான். இது சம்பந்தமாக சில உலமாக்கள் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்கள்.
இன்ஷா-அல்லாஹ்! அப்புத்தகங்களில் இருந்து சில விஷயங்களை அல்-குர்ஆன் அஸ்-ஸுன்னா ஆதாரங்களுடன் பார்ப்போம்!
இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் சிறு குறிப்புக்களின் மூலம் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுப்போம்! இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகளை ஆதாரங்களுடன் கற்று நல்-அமல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம்!
֍ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ நபியுடைய மனைவிமாருக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்திற்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ குறுகிய கால அமலுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ மூன்று சாராருக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ முயற்சி செய்து அல்-குர்ஆனை ஓதுபவருக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ நீதித்துவம் செய்பவர்களுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ ஸதகாக்களை உற்றார் உரவினர்களுக்கு கொடுப்பவருக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ அஸர் தொழுகையை பேணி பாதுகாத்து வருபவருக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
֍ ஜனாஸாவை பின்தொடர்ந்து; அதன் தொழுகையில் ஈடுபடுவருக்கு இரட்டிப்பாகக் கொடுக்கப்படும் கூலிகள்.
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.