بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
இது குர்ஆனை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஸுன்னாவை, ஹதீஸை நிராகரிக்கும் ‘குர்ஆனியூன்கள்’ என்று அழைக்கப்படுபவர்களுக்கு, குர்ஆனின் அடிப்படையிலேயே கொடுக்கப்படும் மறுப்பு..
குர்ஆனை மாத்திரம் ஏற்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னாவை, ஹதீஸை மறுக்கும் ஒரு கூட்டம் இன்று எமது சமூகத்திற்கு மத்தியில் பரவி வருகிறது.
✽ அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையைக் காட்டுபவர்கள் யார்?
✽ அல்-குர்ஆனை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?
✽ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களுடைய ஸுன்னா அல்லாஹ்வால் இறக்கிவைக்கப்பட்ட இரண்டாவது வஹியாகும் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார்?
✽ நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் விளக்கமும் வழிகாட்டுதலும் (சுன்னா) இல்லாவிட்டால், தொழுகை (ஸலாத்) மற்றும் நோன்பு (ஸவ்ம்) போன்ற பல கடமைகளை எப்படி நிறைவேற்றுவது என்ற நடைமுறை விளக்கம் குர்ஆனில் முழுமையாக இல்லை என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர். எனவே அந்த வழிகாட்டலை காட்டித்தவர் யார்?
✽ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வழிகெட்ட குப்ரான குர்ஆனிய்யூன் கூட்டத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடையாளப்படுத்தினார்களா?
✽ இவர்களை பற்றிய அல்லாஹுத்தஆலாவின் எச்சரிக்கை என்ன?
இன்ஷா அல்லாஹ்! கீழ்க்காணும் உரையை செவிமடுப்போம்! குர்ஆனிய்யூன்களின் வழிகேட்டை குப்ரை அறிந்து கொள்வோம்! இந்த வழிகேட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

