بسم الله الرحمن الرحيم
அஷ் ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
நாங்கள் பாவங்களில் வீழ்ந்துவிட்டால் பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? அதனை அல்லாஹுத் தஆலா காட்டித்தந்துள்ளான்; இது அல்லாஹ் ஸுஃப்ஹானஹூ வத-ஆலாவின் மேலான பேரருளாக இருக்கிறது.
எங்களுடைய பாவங்களை நீக்கக்கூடிய சில பரிகரங்களின் தொடர்ச்சி:
பாவங்களை நீக்கி மேலும் பாவ மன்னிப்பை பெற்றுத்தரக்கூடிய ஏழாவது பரிகாரம்: ஸகாத், ஸதகாக்களை (தர்மங்களை) கொடுப்பது ஆகும்.
பாவங்களுக்கு பரிகாரத்தை பெற்றுத்தரும் எட்டாவது பரிகாரம்: நோன்பு நோட்பது ஆகும்.
பாவங்களில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒன்பதாவது பரிகாரம்: ஹஜ் மற்றும் உம்ராவை நிறைவேற்றுவது ஆகும்.
பாவங்களை நீக்கி மேலும் பாவ மன்னிப்பை பெற்றுத்தரக்கூடிய பத்தாதாவது பரிகாரம்: தீனை நிலாநாட்டி நபி ஸலல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸுன்னாவை கடினமாக பற்றிப்பிடிப்பது ஆகும்.
பாவங்களை நீக்கி பாவ மன்னிப்பை பெற்றுத்தரக்கூடிய பதினோராவது பரிகாரம்: நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது ஆகும்.
பாவங்களில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பன்னிரண்டாவது பரிகாரம்: அல்லாஹ்விடம் இருந்து வரும் சோதனைகள் ஆகும்.
பாவங்களில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பதின்மூன்றாவது பரிகாரம்: நற்செயல்கள் ஆகும்.
மேற்கூறப்பட்ட விஷயங்கள் எவ்வாறு பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது? அதற்கான ஆதாரங்கள் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதிலை இன்ஷா-அல்லாஹ்! கீழ்க்காணும் ஷெய்க் அவர்களின் உரையை செவிமடுத்து ஆதாரங்களுடன் கற்றுக் கொள்வோம்!
எங்களுடைய ஆத்மாக்களையும் எங்களுடைய உறுப்புக்களையும் எங்களுடை பாவங்களை விட்டும் சுத்தப் படுத்திக் கொள்வோம்!
ங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.