بسم اللــــه الرحمـــــــــن الرحيم
அஷ்-ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் நவ்வாஸ் அல் ஹிந்தி ஹஃபிதஹுல்லாஹ்
وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ ؕ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ
மேலும், (நபியே!) அநியாயக்காரர்கள் செய்கின்றவைகளைப் பற்றி அல்லாஹ்வை பராமுகமானவனாக நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், அவர்களை அவன் தாமதப்படுத்துவதெல்லாம் பார்வைகள் எதில் நிலை குத்தியவாறு இருக்குமோ அந்த (கொடியதொரு மறுமை) நாளுக்காகத்தான்., (ஸூரத்து இப்ராஹீம்: 42)
فَتِلْكَ بُيُوْتُهُمْ خَاوِيَةً ۢ بِمَا ظَلَمُوْا ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـقَوْمٍ يَّعْلَمُوْنَ
அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயங்களின் காரணமாக (அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் இதோ பாழடைந்து கிடக்கின்றன. அறியக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (ஸூரத்துந் நம்லி: 52)
அபூதர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:
என் அடியார்களே! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன். அதை உங்களிடையேயும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள். (முஸ்லிம்)
அநியாயம் மிகக் கெடுதியான் ஒரு பாவம் ஆகும்.
அநியாயம் மூன்று வகைப்படும்.
1 அடியான் தன் இறைவனுக்குச் செய்யும் அநீதி. இது அவனை நிராகரிப்பதால் ஏற்படுகிறது.
2 ஒருவன் பிறருக்கு அநீதி இழைப்பது.
3 ஒருவன் தனக்குத் தானே அநீதி இழைப்பது.
இன்ஷா-அல்லாஹ்! மேற்காணும் மூன்று வகையான அநியாயங்களைப் பற்றி ஆதாரங்களுடன் கீழ்க்காணும் உரையை செவிமடுத்து கற்றுக் கொள்வோம்! அநீதி இழைப்பதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளை அறிந்து அதிலிருந்து தவிர்ந்து கொள்வோம்!
எங்களுடைய இந்த அறிவுத் தளத்துடன் இணைந்திருப்பதன் மூலம்; இங்கு பதிவிடப்படும் உண்மையான ஸலபி உலமாக்களின் அல்-குர்ஆன், அகீதா, தவ்ஹீத், பிக்ஹ், பத்வாக்கள் போன்ற இன்னும் பல பயன்தரக்கூடிய அறிவுகளிலிருந்து, இன்ஷா அல்லாஹ் பயன்பெற முடியும்.

